குஜராத்தின் சூரத் நகரத்தின் வராச்சா பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த கரோனா நோயாளி தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சூரத்தில் 64 வயதான முதியவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி கரோனனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் வீட்டு தனிமைப்படுத்தலிலிருந்தார்.
இந்தநிலையில் அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கபோத்ரா காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்.
விசாரணையில் உயிரிழந்தர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டிருந்தார், அதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.