முகப்பு
இந்தியா

மிசோரத்தில் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியது

மிசோரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
29 more COVID-19 cases in Mizoram
பகிர்:

மிசோரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

புதிதாக பதிவாகியுள்ள பாதிப்பை தொடர்ந்து மொத்தம் பாதிப்பு 1,003 ஆக அதிகரித்துள்ளதாக அரசு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

தொற்று பாதிக்கப்பட்ட 500 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 503 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 77,266 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,057 பேர் இறந்த நிலையில், ஒட்டுமொத்த எண்ணிக்கை பலி 61,529ஐ எட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.