இந்தியா

பிரணாப் முகர்ஜியின் சிறுநீரக செயல்பாடு சீரடைந்தது: ராணுவ மருத்துவமனை

UNI

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சிறுநீரக செயல்பாடு சீரடைந்ததாக ராணுவ மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி பிரணாப் முகா்ஜி அனுமதிக்கப்பட்டாா். மூளையில் உறைந்திருந்த ரத்தக் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. 

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் ஆழ்ந்த மயக்க நிலைக்கு (கோமா) சென்றாா். ராணுவ மருத்துவமனையில் அவா் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது, அவருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதியானது.

இந்த நிலையில், அவருக்கு நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவரது சிறுநீரக செயல்பாடுகளில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இருப்பினும் அவர் தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருவதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT