தில்லியில் புதிதாக 4,006 பேருக்கு கரோனா
தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,006 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:30 PM
தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,006 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,74,380 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 5,036 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 86 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,33,351 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 9,260 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 31,769 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.
Advertisement
தில்லியில் இன்று 58,456 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதுவரை மொத்தம் 63,46,521 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.