இந்தியா

லட்சத்தீவுகளின் நிர்வாகத் தலைவர் தினேஷ்வர் சர்மா மறைவிற்கு அமித்ஷா இரங்கல்

DIN

மறைந்த லட்சத்தீவுகளின் நிர்வாகத் தலைவர் தினேஷ்வர் சர்மா மறைவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

லட்சத்தீவுகளின் நிர்வாகத் தலைவராக பணியாற்றி வந்த தினேஷ்வர் சர்மா வெள்ளிக்கிழமை காலமானார். அவரது மறைவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது இரங்கல் செய்தியில் அவர்,  “லட்சத்தீவுகளின் நிர்வாகத் தலைவர் தினேஷ்வர் சர்மா காலமானதை கேட்டதும் முகுந்த வேதனையடைந்தேன். அவர் இந்திய காவல்துறை பணியில் அர்ப்பணிப்புமிக்க அதிகாரியாக மிகுந்த பக்தியுடன் தேசத்திற்கு சேவை செய்தார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி” எனத் தெரிவித்துள்ளார்.

பிகாரைச் சேர்ந்த தினேஷ்வர் சர்மா (வயது 66). 1976ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் தேர்வான இவர், புலனாய்வுத் துறையின் இயக்குநர் உள்பட பல முக்கிய பணிகளில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கைப் பேரிடர், வன்முறை... இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

செல்லப் பிராணியை சரமாரியாக தாக்கும் நபர்: வைரல் விடியோ!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

மோடியைப் போல பாகிஸ்தானுக்கும் தலைவர் வேண்டும்: தொழிலதிபர் சஜித் தரார்

SCROLL FOR NEXT