தில்லியில் இன்று மேலும் 2,706 பேருக்கு கரோனா
தில்லியில் இன்று ஒரேநாளில் 2,706 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று ஒரேநாளில் 2,706 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று 73,536 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில்,
‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 32,023 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 41,513 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் இன்று புதிதாக 2,706 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதன்மூலம், கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5,92,250 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றால் தலைநகரில் இன்று 69 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 9,643-ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து இன்று 4,622 போ் மீண்டுள்ளனா்.
இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,57,914-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 24,693 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 15,276 போ்
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளா். மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 12,669 படுக்கைகள் காலியாக உள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட
பகுதிகள் 6173ஆக உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.