முகப்பு
இந்தியா

கேரளத்தில் ஒரேநாளில் 4,777 பேருக்கு கரோனா; 28 பேர் பலி

கேரளத்தில் புதிதாக 4,777 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 6 டிசம்பர், 2020 at 9:02 PM
கோப்புப் படம்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM

கேரளத்தில் புதிதாக 4,777 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 4,777 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதனால் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,36,392ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 60,924 சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பிலிருந்து இன்று 5,217 பேர் குணமடைந்தனர். 
இதன்மூலம் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,27,911 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனாவுக்கு இன்று 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,418 ஆக அதிகரித்துள்ளது. 
மேலும் இன்று மட்டும் 51,893 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.