முகப்பு
இந்தியா

மணப்பெண்ணுக்கு கரோனா: கவச உடையில் மையத்திலேயே திருமணம் 

கரோனா பெருந்தொற்றால் பல திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், ராஜஸ்தானில் மணமகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தங்கியிருந்த மையத்திலேயே திருமணம் நடைபெற்றுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
மணப்பெண்ணுக்கு கரோனா: கவச உடையில் மையத்திலேயே திருமணம்
பகிர்:


கரோனா பெருந்தொற்றால் பல திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், ராஜஸ்தானில் மணமகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தங்கியிருந்த மையத்திலேயே திருமணம் நடைபெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பராவில் உள்ள கரோனா நோயாளிகள் மையத்தில், மிக ஆபூர்வமான ஒரு நிகழ்வாக திருமண வைபவம் நடந்தேறியுள்ளது. மணக்கள் இருவரும் தற்பாதுகாப்பு கவச உடையில் மாலை மாற்றி, தங்களது சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தவர்களும் கவச உடை அணிந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசின் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் விடியோவில், மணமக்கள் இருவரும் கவச உடை அணிந்து கொண்டு திருமணச் சடங்குகளை செய்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த வேத விற்பன்னர்களும் கவச உடை அணிந்தபடியே திருமணம் செய்து வைத்தனர்.

கவச உடைக்கு மேல் தலையில் அவர்களது கலாசாரத்தின் அடிப்படையில் தலைப்பாகை அணிந்திருந்தார். மணப்பெண் முகப் பாதுகாப்பு கவசமும், கையுறையும் அணிந்து சடங்குகளை செய்தார்.

திருமணத்துக்கு சில நாள்களுக்கு முன்பு, மணப்பெண்ணுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், திருமணத்தை தள்ளிப்போட விரும்பாத மணமக்கள், கரோனா மையத்திலேயே திருமணம் செய்து கொண்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →