ஆப்கனில் தலிபான் தாக்குதல்: 2 பேர் பலி, மூவர் காயம்
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ஆப்கன் வீரர்கள் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ஆப்கன் வீரர்கள் பலியாகியுள்ளனர்.
காஸ்னியின் அந்தார் மாவட்டத்தில் இராணுவத் தளத்தின் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 ஆப்கான் வீரர்கள் கொல்லப்பட்டனர். மூவர் காயமடைந்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும், தலிபான் தற்கொலை படையினர் குண்டு வெடிப்பு நிகழ்த்துவதற்குள், அது தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்தது.