அண்ணா ஹசாரே 
இந்தியா

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காவிட்டால் மக்கள் இயக்கம்: ஹசாரே எச்சரிக்கை

விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் மக்கள் இயக்கத்தைத் தொடங்குவேன் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ANI


அஹமதுநகர்: விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் மக்கள் இயக்கத்தைத் தொடங்குவேன் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லோக்பால் மக்கள் இயக்கம் நடந்த போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் ஆட்சியே ஆட்டம் கண்டது. தற்போது விவசாயிகள் போராட்டத்தையும் நான் அப்படியே பார்க்கிறேன். நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடந்த போது, நான் எனது ரலேகான் சித்தி கிராமத்தில் மக்கள் இயக்கத்தை நடத்தினேன். அன்றைய தினம் உண்ணாவிரதப் போராட்டததையும் நடத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாவிட்டால், நான் மீண்டும் மக்கள் இயக்கத்தைத் தொடங்குவேன். லோக் பாலை எதிர்த்து போராட்டம் நடத்தியதைப் போலவே போராட்டம் நடக்கும் என்று எச்சரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT