முகப்பு
இந்தியா

கேரளத்தில் கரோனா தடுப்பூசி இலவசம்: முதல்வர் பினராயி

கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மாநில முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை அறிவித்தார்.

Updated On : 12 டிசம்பர், 2020 at 9:22 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:36 PM


கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மாநில முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை அறிவித்தார்.

கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சிறிய இடைவேளைக்குப் பிறகு சனிக்கிழமை மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கரோனா தடுப்பூசிக்கு யாரிடமும் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் இதுவே அரசின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே தமிழகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், சமீபத்திய மாநிலமாக கேரளமும் இதனை அறிவித்துள்ளது.

Advertisement

பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் ஃபைசர் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசி பரிந்துரையில் இருப்பதாக மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.