பூரி ஜெகந்நாதர் கோயில் டிச.23-ல் திறக்கப்படுகிறது 
இந்தியா

பூரி ஜெகந்நாதர் கோயில் டிச.23-ல் திறக்கப்படுகிறது

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்கும் பூரி ஜெகந்நாதர் கோயில் வரும் 23-ம் தேதி திறக்கப்படுகிறது.

ENS


புவனேஸ்வர்: கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்கும் பூரி ஜெகந்நாதர் கோயில் வரும் 23-ம் தேதி திறக்கப்படுகிறது.

இது குறித்து முடிவு செய்ய கோயில் நிர்வாகம் தரப்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், 12-ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட பூரி ஜெகந்நாதர் கோயிலை வரும் 23-ம் தேதி திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பூரி ஜெகந்நாதர் கோயிலை டிசம்பர் 23-ம் தேதி திறக்கலாம் என்ற பரிந்துரையை ஒடிசா அரசுக்கு கோயில் நிர்வாகம் அனுப்பி, ஒப்புதல் கிடைத்ததும், கோயிலை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிகிறது.

அதேவேளையில், கோயில் டிசம்பர் 23-ம் தேதி திறக்கப்பட்டாலும், டிசம்பர் 31 வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்றும், ஜனவரி 3-ம் தேதி முதல் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT