2022 உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி: அகிலேஷ் அறிவிப்பு 
இந்தியா

2022 உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி: அகிலேஷ் அறிவிப்பு

2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

DIN

2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்து வரும் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. மொத்தம் 403 சட்டப்பேரவை இடங்களுக்கான இந்தத் தேர்தலில் கூட்டணி அமைப்பது சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தார்.

“பெரிய கட்சிகளுடன் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி சிறப்பாக செயல்படாத நிலையில் சிறிய கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணியை ஏற்படுத்தும்” என அகிலேஷ் தெரிவித்தார்.

மேலும் “2022 ஆம் ஆண்டில் சமாஜ்வாடி கட்சி மாநிலத்தில் பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT