இந்தியா

காங்கிரஸுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை: பிரகலாத் ஜோஷி

DIN


காங்கிரஸ் கட்சிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை என கர்நாடக சட்டமேலவையில் ஏற்பட்ட அமளி தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவித்தது:

"சட்ட மேலவை துணைத் தலைவர் வலுக்கட்டாயமாக கீழே தள்ளப்பட்டது தெரிகிறது. காங்கிரஸுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை. தற்போதைய சட்ட மேலவைத் தலைவர் ஜனநாயகத்தின் நலனில் அக்கறை கொண்டு செயல்படவில்லை. அதனால்தான் அவருக்கு எதிராக எங்களது கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. சட்ட மேலவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால், அவர் இருக்கையில் அமரக் கூடாது. ஆனால், அவர் இருக்கையில் அமர முயற்சித்தார்.

துணைத் தலைவரே கூட்டத்தை வழிநடத்த வேண்டும் என பெரும்பாலானோர் விரும்பினர். ஆனால், அவர் காங்கிரஸ் உறுப்பினர்களால் வலுக்கட்டாயமாக கீழே தள்ளப்பட்டார்.

இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு காங்கிரஸ் சட்ட மேலவை உறுப்பினர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்."  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT