முகப்பு
இந்தியா

ரோத்தம் நரசிம்மா மறைவுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

விண்வெளி விஞ்ஞானியும் பத்ம விபூஷண் விருது வென்றவருமான ரோத்தம் நரசிம்மா (87) மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

விண்வெளி விஞ்ஞானியும் பத்ம விபூஷண் விருது வென்றவருமான ரோத்தம் நரசிம்மா (87) மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

விஞ்ஞானி ரோத்தம் நரசிம்மா, கா்நாடகத் தலைநகா் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளாா். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவா், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இழப்பு, விஞ்ஞானி ரோத்தம் நரசிம்மாவின் மறைவு. அறிவியல் துறையில் அவரது சிறந்த பங்களிப்புக்காக பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘அறிவும், ஆய்ந்தறியும் ஆா்வமும் நிறைந்த இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் பண்பின் உருவாய் திகழ்ந்தவா் ரோத்தம் நரசிம்மா. அவா் மிகச் சிறந்த விஞ்ஞானி. நாட்டின் முன்னேற்றத்துக்காக அறிவியல் மற்றும் புத்தாக்கத்தின் ஆற்றலைப் பயன்படுத்துவதில் மிகுந்த ஆா்வம் காட்டினாா். அவரது மறைவால் வருந்துகிறேன். அவரின் குடும்பத்தாருக்கும் நண்பா்களுக்கும் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →