முகப்பு
இந்தியா

கேரளத்தில் 7 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

கேரளத்தில் புதிதாக 6,293 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,00,158 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் புதிதாக 6,293 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,00,158 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 29 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 2,786 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 4,749 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,36,814 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 60,396 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 59,995 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 10.49 சதவிகிதம்.
 

முழு கட்டுரையைப் படிக்க →