எந்த அச்சுறுத்தலையும் பொறுத்துக் கொள்ள முடியாது: ராஜ்நாத் சிங்
இந்திய - சீன எல்லைப் பகுதியில் சீனப் படைகளின் அத்துமீறல்களின்போது நமது படை எப்போதும் பலம் குறைந்தது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தக்க பதிலடி கொடுத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சி
இந்தியாஎந்த அச்சுறுத்தலையும் பொறுத்துக் கொள்ள முடியாது: ராஜ்நாத் சிங்
இந்திய - சீன எல்லைப் பகுதியில் சீனப் படைகளின் அத்துமீறல்களின்போது நமது படை எப்போதும் பலம் குறைந்தது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தக்க பதிலடி கொடுத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சி
ஹைதராபாத்: இந்திய - சீன எல்லைப் பகுதியில் சீனப் படைகளின் அத்துமீறல்களின்போது நமது படை எப்போதும் பலம் குறைந்தது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தக்க பதிலடி கொடுத்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது, ஆனால், எந்த விதமான அச்சுறுத்தல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக தெலங்கானா மாநிலத்திற்கு வெள்ளிக்கிழமை சென்றார்.
தெலங்கானாவின் துண்டிகலில் உள்ள இந்திய விமானப் படை அகாடமியின் தளத்தில் நடைபெற்ற கூட்டு அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறினார்.
சீனாவின் நோக்கம் என்ன என்பது, இந்த கரோனா பேரிடர் காலத்தில் நன்கு வெளிப்பட்டதாகவும், ஆனால் நாம் பலவீனமானவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருப்பதாகவும், எல்லையில் நடைபெறும் எந்த விதமான அத்துமீறல்களுக்கும் இந்த புதிய இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.