முகப்பு
இந்தியா

உத்தரகண்ட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு உத்தரகண்ட் அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
உத்தரகண்ட்டில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை
பகிர்:

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு உத்தரகண்ட் அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.

உத்தரகண்ட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 2021 புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு மாநில அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா பரவலைக் குறைக்கும் வகையில் டிசம்பர் 31 முதல் ஜனவரி 1 வரை இந்தத் தடை அமலில் இருக்கும் எனவும் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது எனவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.