முகப்பு
தாணே குடிசைப் பகுதியில் தீ விபத்து: 8 குடிசைகள் சேதம் (கோப்புப்படம்)
இந்தியா

தாணே குடிசைப் பகுதியில் தீ விபத்து: 8 குடிசைகள் சேதம்

மகாராஷ்டிரத்தில் தாணே குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 குடிசைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மக்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

இந்தியா

தாணே குடிசைப் பகுதியில் தீ விபத்து: 8 குடிசைகள் சேதம்

மகாராஷ்டிரத்தில் தாணே குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 குடிசைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மக்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
தாணே குடிசைப் பகுதியில் தீ விபத்து: 8 குடிசைகள் சேதம் (கோப்புப்படம்)
பகிர்:

மகாராஷ்டிரத்தில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 குடிசைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மக்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தில் தாணேயிலுள்ள பிவாண்டி குடிசைப் பகுதியில் இன்று (டிச.26) அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

மக்கள் உடனடியாக குடிசைகளிலிருந்து வெளியேறி, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

உடனடியாக 2 தீயணைப்பு வாகனங்களுடன் நிகழ்விடத்திற்கு வந்த வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

குடிசைகள் அருகருகே இருந்ததால், தீ வேகமாக பரவியதாகவும், இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் பிவாண்டி மாநகராட்சி தீயணைப்புத்துறை தலைமை அதிகாரி ராஜேஷ் பவார் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →