உத்தரகண்ட் முதல்வர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கரோனா நோய்த் தொற்றால் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து வார் டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவருக்கு திடீரென காய்ச்சல் அதிகரித்ததை அடுத்து இன்று அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.