விவசாயிகள் போராட்டத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்: விவசாயிகள் வலியுறுத்தல் 
இந்தியா

விவசாயிகள் போராட்டத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்: விவசாயிகள் வலியுறுத்தல்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது பலியான விவசாயிகளின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையின் போது விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது பலியான விவசாயிகளின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையின் போது விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 35 நாள்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுவரையில் நடைபெற்ற மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் 6ஆம் கட்டப் பேச்சுவார்த்தை புதன்கிழமை தொடங்கியது. 

இதில் மத்திய அரசின் தரப்பில் அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோரும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். 

இந்நிலையில் கடந்த 35 நாள் போராட்டத்தின் போது பலியான விவசாயிகளின் குடும்பத்துக்கு மத்திய அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். 

இதுவரை வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் 33 விவசாயிகள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT