முகப்பு
இந்தியா

நாட்டில் அதிதீவிர கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25 ஆனது

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட அதிதீவிர கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 25 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
நாட்டில் அதிதீவிர கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25 ஆனது
பகிர்:


புது தில்லி: பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட அதிதீவிர கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 25 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வியாழக்கிழமை காலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இவர்களில் பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய நிலையில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அதிதீவிர கரோனா தொற்றுப் பரவிய 20 பேரும் அடங்குவர்.

Advertisement

இந்த 25 பேரும் தனிமைப்படுத்தி சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இவர்களுடன் விமானத்தில் வந்தவர்கள், தொடர்பிலிருந்த குடும்பத்தினர் உள்பட அனைவரையும் கண்காணிக்கவும் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments