புத்தாண்டு மணற்சிற்பம் உருவாக்கி வாழ்த்து தெரிவித்த ஒடிசா கலைஞர்
புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஒடிசா மாநில கலைஞர் மனஸ் குமார் சாஹூ 7 மணி நேரம் செலவழித்து மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஒடிசா மாநில கலைஞர் மனஸ் குமார் சாஹூ 7 மணி நேரம் செலவழித்து மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
உலகம் முழுவதும் 2021 புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் கலைகட்டத் தொடங்கியுள்ளன. மக்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை பிறருக்கு தெரிவித்து புத்தாண்டை வரவேற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞரான மனஸ் குமார் சாஹூ பூரி பகுதியில் உள்ள கோல்டன் கடற்கரையில் மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
Advertisement
இந்த மணற்சிற்பத்தை உருவாக்க அவர் 7 மணி நேரம் செலவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.