இந்தியா

அரசின் பல்வேறு திட்டப் பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற நடவடிக்கை: அதிகாரிகளுக்கு மோடி உத்தரவு

DIN


புதுதில்லி: அரசின் பல்வேறு திட்டப் பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். 

மத்திய அரசின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் குறைபாடுகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக, பிரகதி எனப்படும் ஆய்வுக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

அந்த அடிப்படையில் பிரகதியின், 34 ஆவது ஆய்வுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பல்வேறு திட்டங்கள், திட்டங்கள் மற்றும் குறைகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சகம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகத்தின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், தில்லி, ஹரியானா, குஜராத் மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு துறை திட்டங்கள் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தின் போது, ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஜல் ஜீவன் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது மக்கள் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கு உத்தரவிட்ட பிரதமர்,  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 100 சதவீத சேர்க்கைக்கு அனைத்து மாநிலங்களும் விரைவாக முயற்சிக்க வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கும் ஊக்குவிக்கும் விதமாக ஒரு வரைபடத்தை வரைய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் அவர் கேட்டுக்கொண்டார். 

முந்தைய பிரகதியின், 33 ஆவது ஆய்வுக் கூட்டத்தில் 280 திட்டங்கள், 50 திட்டங்கள், திட்டங்கள் மற்றும் 18 துறைகளில் உள்ள குறைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

SCROLL FOR NEXT