இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்

DIN

2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு தாக்கல் செய்யவிருக்கும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். 

2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். 

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காலை 10:15 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர். 

முன்னதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாக்குர் ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT