முகப்பு
இந்தியா

அஸ்ஸாமில் கடந்த இரு நாட்களாக தீ பிடித்து எரியும் ஆறு!

அஸ்ஸாமில் பூமிக்கடியில் உள்ள எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவினால் அங்குள்ள ஆற்றின் கரையோரப்பகுதி தீப்பிடித்து எரிகிறது. 

Updated On : 3 பிப்ரவரி, 2020 at 5:21 PM
பகிர்:

அஸ்ஸாமில் பூமிக்கடியில் உள்ள எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவினால் அங்குள்ள ஆற்றின் கரையோரப்பகுதி தீப்பிடித்து எரிகிறது. 

அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகார் மாவட்டத்தில் உள்ள சஸோனி என்ற கிராமத்தின் அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்து வருகிறது. ஆற்றை ஒட்டியுள்ள எண்ணெய் குழாய் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

பூமிக்கடியில் பதிக்கப்பட்ட ஆயில் இந்தியா நிறுவனத்தின் எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டு, வெடித்த நிலையில், எண்ணெய் ஆற்றுடன் கலந்து தீ பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Advertisement

அரசு அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும் அவர்கள் கடந்த இரு தினங்களாக அதிகாரிகள் எந்த நவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.