பெங்களூரு: பொதுவாக சாலை வசதி குறைந்த, மின்சாரம் இல்லாத கிராமங்களில் இருந்து விடுபட்டு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்த 8 கிராமங்களும், ஒரு முன்மாதிரியாக விளங்குகின்றன.
தொட்டஜ்ஜல்லா பஞ்சாயத்துக்கு உட்பட்ட 8 கிராமங்களில், நகரங்களை விட மிகச் சிறப்பான முறையில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி கங்காராமுக்குத்தான் அனைத்து கிராம மக்களும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். நவரத்னாக்ரஹா மற்றும் தொட்டஜல்லா கிராமங்களில் ஆர்ஓ முறையிலான குடிநீர் சுத்திகரிப்பு ஆலை, சூரியசக்தியில் இயங்கும் தெரு விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் என அனைத்தும் இருக்கிறது இந்த கிராமங்களில். அது மட்டுமல்ல, இலவச வை-ஃபை வசதியும் உள்ளது. கூடிய விரைவில் மேலும் 4 கிராமங்களிலும் இந்த வசதி செய்யப்பட உள்ளது.
இந்த கிராமங்களின் மேம்பாட்டு அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட பணிப் போட்டியே, இப்படி கிராமங்களை உருதெரியாமல் நகரங்களைப் போல ஆக்கியிருக்கிறது. யார் கிராமம் சிறப்பான கிராமமாக மாறுகிறது என்பதில் இந்த கிராம மேம்பாட்டு அதிகாரிகளுக்குள் செரிய சவாலே இருக்கிறது. இந்த சவாலே பல சாதனைகளுக்கு வழிகோலியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.