மக்களிடம் கையிருப்பும் இல்லை, அந்நிய முதலீடுகள் வரப்போவதும் இல்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் 2020-21 நிதிநிலை அறிக்கை தொடர்பான பொது விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில்,
நமது நாட்டு மக்களின் கையில் தற்போது பணம் இல்லை. எந்த முதலீட்டிலும் ஊக்கத்தொகை கூட கிடைப்பதில்லை. ஆனால், இதற்கு மாறாக தற்போது நாடு முழுவதும் அச்ச உணர்வும், நிலையற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அந்நிய முதலீடு வருவதற்கான வாய்ப்பும் இல்லை என்று விமர்சித்தார்.