எங்களுக்கு எதிரான மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்: தில்லி தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ்
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு எங்களுக்கு எதிராக இருந்தாலும் அதனை ஏற்கிறோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு எங்களுக்கு எதிராக இருந்தாலும் அதனை ஏற்கிறோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சி 53.50% வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக 38.79% வாக்குகள் பெற்றுள்ளன. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் வெறும் 4.2% வாக்குகளை மட்டுமே பிடித்துள்ளது.
இந்த நிலையில், தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கூறப்பட்டிருப்பதாவது, மக்களின் முடிவு எங்களுக்கு எதிராகவே உள்ளது. எனினும் அதனை நாங்கள் ஏற்கிறோம். கட்சியின் மீண்டும் கட்டமைப்போம், பலத்தை மீட்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.