ஜப்பான் கப்பலில் 2 இந்தியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு
ஜப்பானில் தனிப்படுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இரண்டு இந்தியர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாஜப்பான் கப்பலில் 2 இந்தியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு
ஜப்பானில் தனிப்படுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இரண்டு இந்தியர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் தனிப்படுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இரண்டு இந்தியர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டயமண்ட் பிரின்சஸ் என்ற கப்பலில் இருந்து ஹாங்காங் துறைமுகத்தில் தரையிறங்கிய ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, டோக்கியோவுக்குத் தெற்கேயுள்ள யோகோஹாமா துறைமுகத்திற்குக் கடந்த வாரத்தில் வந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பல் தனிப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கப்பலில் 1,100 பணியாளர்களுடன் 2,670 பயணிகளும் சேர்த்து மொத்தம் சுமார் 3,700 பேர் இருக்கின்றனர். புதிய காற்றை சுவாசிப்பதற்காக சுழற்சி முறையில் இவர்கள் கப்பலின் மேற்தளத்தில் வந்து நிற்க அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து, இவர்கள் தங்கள் உடல் வெப்பநிலையைச் சோதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே 136 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், புதிதாக 30-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தக் கப்பலில் கரோனா வைரஸாஸ் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது.
இதில், 2 இந்தியர்களுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜப்பான் சுகாதார நெறிமுறைப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனிமைப்படுத்தப்படுவது உட்பட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய சிகிச்சையளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.