இந்தியா

நிர்பயா வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்த நீதிபதி பானுமதி

PTI


புது தில்லி: நிர்பயா குற்றவாளிகளைத் தனித்தனியாக தூக்கிலிடுவது தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி திடீரென மயங்கி விழுந்தார்.

நிர்பயா குற்றவாளிகளைத் தனித்தனியாக தூக்கிலிடுவது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் மனு மீது, முக்கிய உத்தரவுகளை நீதிபதி பானுமதி பிறப்பித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை உடன் இருந்த நீதிபதிகள் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர் குழு முதலுதவி சிகிச்சை அளித்ததை அடுத்து, அவருக்கு மயக்கம்தெளிந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT