புதிய வடிவில் ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் நடைமுறை தொழில்முனைவோா் வா்த்தகம் புரிவதை எளிதாக்கும் என ஜிஎஸ்டிஎன் தலைமைச் செயல் அதிகாரி பிரகாஷ் குமாா் தெரிவித்தாா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
மின்-விலைப்பட்டியல் என்பது வணிகத்தை எளிதாக்கவும், ஜிஎஸ்டி அறிக்கையை தாக்கல் செய்யவும் ஒரு எளிதான மேம்படுத்தப்பட்ட வழிமுறையாகும். தரவுகளை நாம் சொந்தமாக நிரப்பும்போது அது பிழைகளுக்கும், தவறான உள்ளீடுகளுக்கும் வழிவகுக்கும். ஆனால், புதிய முறையில் அதுபோல் நிகழ வாய்ப்பில்லை.
புதிய வடிவில் ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் நடைமுறை வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதை மேலும் எளிதாக்கவும், நேரடி வரிகள் குறித்த அறிக்கையை தாக்கலை மேம்படுத்தவும் பெரிதும் உதவியாக இருக்கும் என்றாா் அவா்.