சிஏஏ குறித்து எதுவுமே தெரியாமல் எதிர்க்கிறார் ஒவைஸி: ஆந்திர பாஜக தலைவர்
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து எதுவுமே தெரியாமல் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி அதை எதிர்க்கிறார் என ஆந்திர பாஜக தலைவர் கண்ணா லக்ஷ்மிநாராயணா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து எதுவுமே தெரியாமல் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி அதை எதிர்க்கிறார் என ஆந்திர பாஜக தலைவர் கண்ணா லக்ஷ்மிநாராயணா தெரிவித்துள்ளார்.
ஆந்திர பாஜக தலைவர் கண்ணா லக்ஷ்மிநாராயணா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,
"குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கு (என்பிஆர்) எதிராக ஒவைஸி விஜயவாடா நகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது துரதிருஷ்டவசமானது. மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு அவர் அதை கவனமாகப் படிக்காமல் எதிர்க்கிறார்.
Advertisement
அமராவதியை தலைநகராக உருவாக்குவதற்கு பாஜக தலைவர்கள் ஆதராகவே உள்ளனர். பாஜக தலைவர்களுக்கும், மாநில அரசுக்கும் ஒரே நிலைப்பாடுதான்" என்றார்.
சிஏஏ-வை ஒவைஸி கடுமையான விமரிசித்து வருவது குறிப்பிடத்தக்கது.