முகப்பு
இந்தியா

தலித் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 3 இளைஞர்கள்

ஷாம்லி மாவட்டத்தில் பாபீசா கிராமத்தில் செங்கல் சூளைக்குச் சென்று கொண்டிருந்த 16 வயது தலித் சிறுமி

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:54 PM
பகிர்:

ஷாம்லி மாவட்டத்தில் பாபீசா கிராமத்தில் செங்கல் சூளைக்குச் சென்று கொண்டிருந்த 16 வயது தலித் சிறுமி, அப்பகுதியைச் சேர்நெத மூன்று இளைஞர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக போலீஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை செங்கல் சூளையில் பணிபுரியும் தனது உறவினர்களுக்காக சிறுமி மதிய உணவை எடுத்துச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த மூன்று இளைஞர்கள் மீது சிறுமியின் சகோதரர் புகார் அளித்ததாக காவல் நிலைய அதிகாரி எஸ் கே துபே தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாகவும், மற்றவர்கள் தலைமறைவாக உள்ளதாகவும் துபே தெரிவித்தார். மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.