தில்லிக்கு பதிலாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெய்ப்பூரில் தரையிறங்குகிறாரா?
வானிலை மோசமாக இருந்தால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புது தில்லிக்கு பதிலாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தரையிறங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்: வானிலை மோசமாக இருந்தால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புது தில்லிக்கு பதிலாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தரையிறங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புது தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அழைத்துக் கொண்டு வரும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம், வானிலை மோசமாக இருந்தால் புது தில்லிக்கு பதிலாக ஜெய்ப்பூரில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த மாற்று ஏற்பாட்டை முன்னிட்டு, ஜெய்ப்பூர் விமான நிலையத்தின் கட்டமைப்பு மற்றும் இதர வசதிகள் குறித்து ஆய்வு செய்ய இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் மூன்று பேர் திங்கட்கிழமை விமான நிலையத்தை ஆய்வு செய்த நிலையில், மற்றொரு குழு நேற்றும் ஆய்வு செய்துள்ளது.
ஒரு வேளை, அதிபர் வரும் போது, புது தில்லியில் வானிலை மோசமாக இருந்தால், விமானத்தை ஜெய்ப்பூரில் தரையிறக்க தூதரகக் குழுவும் ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.