இந்தியா

காஷ்மீர் நிலைமையை ஆராய 15 நாட்டுத் தூதர்கள் ஸ்ரீநகர் வருகை

காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலையை ஆராய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐ ஜஸ்டர் உட்பட 15 நாடுகளின் தூதர்கள் இன்று ஸ்ரீநகர் வந்துள்ளனர்.

ANI


ஸ்ரீநகர்: காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலையை ஆராய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐ ஜஸ்டர் உட்பட 15 நாடுகளின் தூதர்கள் இன்று ஸ்ரீநகர் வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கு ஊரடங்கு உட்பட பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில், காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் குறித்து ஆராய, அமெரிக்கா உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் இன்று புது தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஸ்ரீநகர் வந்தடைந்தனர்.

ஸ்ரீநகர் வந்த தூதர்களை, புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் வரவேற்றனர். 15 தூதர்களும் இன்று ஜம்மு சென்று அங்கு நிலைமைகளை ஆராய்ந்து இன்று இரவு அங்கு அங்கியிருப்பார்கள்.

இவர்கள் இரண்டு நாட்கள் காஷ்மீரில் தங்கியிருந்து ஆளுநர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT