முகப்பு
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து-கார் நேருக்கு நேர் மோதல்: 12 பேர் படுகாயம்

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

Updated On : 11 ஜனவரி, 2020 at 1:23 PM
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் படு காயமடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் இன்று காலை பனிமூட்டம் காரணமாக ஆக்ரா-லக்னௌ அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். மேலும், அடுத்தடுத்த மூன்று வாகனங்கள் மீது பேருந்து மோதியதில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து, காயமடைந்தவர்கள் உடனடியாக லக்னௌவில் உள்ள டர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.