இந்தியா

மோடி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவர்களை உயிருடன் புதைப்பேன்: உ.பி. அமைச்சர்

DIN

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்புவோர் "உயிருடன் புதைக்கப்படுவார்கள்" என்று உத்தரப்பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங் கூறியது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமைச் சட்ட ஆதரவுப் பேரணி அலிகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் அமைச்சர் ரகுராஜ் சிங் பேசியதாவது,

பிரதமர் நரேந்திர மோடி அல்லது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினால், நான் உங்களை உயிருடன் புதைப்பேன் என்று சிஏஏவுக்கு எதிராக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டங்களைக் குறிப்பிட்டு தெரிவித்தார்.

சிஏஏ-வை எதிர்க்கும் இந்த ஒரு சதவீதத்தினர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். நமது வரியில்தான் வாழ்கிறார்கள். ஆனாலும் நமக்கு எதிராக 'ஒழிக' கோஷங்களை எழுப்புகிறார்கள். இந்த நாடு அனைத்து மதங்களுக்கும் சொந்தமானது, ஆனால் இவ்வாறு எதிர்ப்பு கோஷமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT