இந்தியா

திருமணத்துக்கு சென்றவர்கள் கார் விபத்து: 5 பேர் பலி

IANS

உத்தரபிரதேசத்தின் ஷாஜகஹான்பூரில் ஒரு கார் மரத்தில் மோதி, பள்ளத்தில் விழுந்து 5 பேர்  உயிரிழந்தனர்.

இந்த விபத்து சதா கிராமத்திற்கு அருகே திங்கள்கிழமை இரவு நடந்தது, மேலும் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் ஷாஜகான்பூரில் உள்ள சாந்திபுரம் காலனியில் வசிப்பவர்கள்.

அந்த 5 பேரும் ஷாஜகான்பூரிலிருந்து பிலிபித்துக்கு ஒரு திருமண நிகழ்வில் கலந்துக் கொள்ளச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கார் ஓட்டுநர் மற்றொரு காரை முந்திச் செல்ல முயன்றபோது, வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார்.

வாகனம் நொறுங்கி, கிட்டத்தட்ட இரும்புக் குவியலாகக் காணப்பட்ட நிலையில், அரும்பாடுபட்டுத்தான் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன.  உடனடியாக பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, தற்போது போலீஸ் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT