இந்தியா

சோட்டா ராஜன் மற்றும் கூட்டாளிகள் மீது சிபிஐ 4 புதிய வழக்குகள்

பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மற்றும் கூட்டாளிகள் மீது சிபிஐ 4 புதிய வழக்குகளை புதன்கிழமை பதிவு செய்துள்ளது.

DIN

மும்பையைச் சேர்ந்த பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மற்றும் கூட்டாளிகள் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் குற்றவியல் சதி உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ 4 புதிய வழக்குகளை புதன்கிழமை பதிவு செய்துள்ளது.

முன்னதாக, சோட்டா ராஜனுக்கு எதிராக மகாராஷ்டிர போலீஸார் பதிவு செய்திருந்த கொலை உள்ளிட்ட மூன்று வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும் சோட்டா ராஜன் உள்பட 6 பேருக்கு கொலை முயற்சி வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணமாகிவிட்டதால், அவர்களுக்கு மும்பை நீதிமன்றம் 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மகாராஷ்டிர குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தலா ரூ.5 லட்சம் அபராதத்தையும் இவர்கள் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். தற்போது, தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

SCROLL FOR NEXT