இந்தியா

சிஏஏவுக்கு எதிரான போராட்டம்: ஜாமியா பல்கலைக்கழகத்தில்  மர்ம நபர் துப்பாக்கிச் சூடு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புது தில்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்  மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.

ANI


குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புது தில்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்  மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.

ஜாமியா பல்கலைக்கழகத்தில் இன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏராளமான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கே கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு மாணவர் காயமடைந்தார். தொடர்ந்து அந்த நபர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவாறு கூச்சலிட்டுக் கொண்டே சென்றார்.

இது அனைத்தையும், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் முன்னிலையிலேயே நடந்தது. அங்கிருந்த பலரும் மர்ம நபரின் செயலை விடியோ எடுத்தனர்.

பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், மர்ம நபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT