சமூக நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்தில்  திருநங்கைகளையும் சேர்ப்பதென்று ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது. 
இந்தியா

திருநங்கைகளும் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ப்பு: ஒடிஸா அரசு முடிவு

சமூக நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்தில்  திருநங்கைகளையும் சேர்ப்பதென்று ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது. 

IANS

புவனேஸ்வர்:  சமூக நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்தில்  திருநங்கைகளையும் சேர்ப்பதென்று ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது.

ஒடிஸா அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத் துறை அமைச்சர் அசோக் சந்திர பாண்டா. அவர் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சமூக நலத்திட்டத்தின் கீழ் மாநில அரசால் வழங்கப்படும் ‘மது பாபு பென்ஷன் யோஜனா’  ஓய்வூதியத் திட்டத்தில் திருநங்கைகளையும் சேர்ப்பதென்று ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது.

எனவே அவர்கள் இதற்காக உள்ள இணையதளம் வழியாகவோ அல்லது விண்ணப்பப் படிவங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதன்மூலம் சுமார் 6,000 திருநங்கைகள் பயன்பெறுவார்கள்.

திருநங்கைகளுக்கு அவர்களது வயதினைப் பொறுத்து ரூபாய் 500 முதல் 900 வரை ஓய்வூதியம் கிடைக்கும்.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிஜூ ஜனதா தளம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இதனை வாக்குறுதியாக அளித்திருந்தது. தற்போது அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT