இந்தியா

நாட்டில் பொருளாதார சுனாமி வரும் என பல மாதங்களுக்கு முன்பே கூறினேன்: ராகுல் காந்தி

DIN

இந்தியாவில் பொருளாதார சுனாமி வரும் என தான் பல மாதங்களுக்கு முன்பே கூறியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர், 'சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அழிந்து வருகின்றன. பெரிய நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான அழுத்தத்தில் உள்ளன. வங்கிகள் துன்பத்தில் உள்ளன.

ஒரு பொருளாதார சுனாமி வருவதாக நான் பல மாதங்களுக்கு முன்பு கூறினேன். உண்மையைக் கூறி நாட்டை எச்சரித்ததற்காக பாஜக மற்றும் ஊடகங்கள் அதனை ஏளனம் செய்தன' என்று பதிவிட்டுள்ளார். 

மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் பிரதமர் மோடியின் பல்வேறு கருத்துகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT