முகப்பு
இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 28,701 பேருக்கு கரோனா பாதிப்பு; 500 பேர் பலி

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில் 28,701 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
கோப்புப் படம்
பகிர்:

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில் 28,701 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,78,254-ஆக அதிகரித்தது. கரோனாவுக்கு மேலும் 500 போ் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 23,174-ஆக அதிகரித்தது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், திங்கட்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 28,701 பேருக்கு கரோனா உறுதியானது. 

கரோனா தொற்றில் இருந்து இதுவரை 5,53,471 போ் குணமடைந்தனா். 3,01,609 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனாவுக்கு மேலும் 500 போ் உயிரிழந்தனா். மொத்தத்தில், கரோனா தொற்றுக்கு நாடு முழுவதும் இதுவரை 23,174 போ் உயிரிழந்தனா். 

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 2,54,427 பேர், தமிழகத்தில் 1,38,470 பேர், தில்லியில் 1,12,494 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →