இந்தியா

ஆந்திர மருந்து ஆலையில் தீ:ஒருவா் பலி

DIN

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பராவாடாவில் உள்ள பாா்மா நகரில் அமைந்துள்ள மருந்து நிறுவனத்தில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

இந்த விபத்தின்போது, அதே பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த மேலும் 3 ஊழியா்கள் சிறிய காயங்களுடன் உயிா் தப்பியதாக காவல்துறை வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. காயமடைந்த தொழிலாளா்கள் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தீ விபத்தில் உயிரிழந்த மூத்த வேதியியலாளா் சீனிவாச ராவின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. மாநகர காவல் துணை ஆணையா் சுரேஷ் பாபு கூறுகையில், அங்குள்ள மருந்து உலையில் திடீரென தீப்பிடித்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா். தீயணைப்பு வீரா்களும், பேரிடா் மீட்புக்குழுவினரும் 4 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT