முகப்பு
இந்தியா

அசாம் வெள்ளம்: மோசமடையும் நிலைமை

​அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் பாதிப்பால் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
​அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் பாதிப்பால் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது. (கோப்புப்படம்)
பகிர்:


அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் பாதிப்பால் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது.

அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று (வியாழக்கிழமை) காலை வெளியிட்ட செய்திக் குறிப்பில் நேற்று மாலை முதல் 2 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பலி எண்ணிக்கை 68 ஆகியுள்ளது.

வெள்ளத்தால் பாதித்தோரின் எண்ணிக்கையும் இன்று காலை ஒரு லட்சத்துக்கும் மேல் உயர்ந்து 36,42,546 ஆகியுள்ளது.

அசாமில் பல்வேறு மாவட்டங்களிலுள்ள 247 மீட்பு முகாம்களில் 37,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர். 91 வருவாய் வட்டங்கள் மற்றும் 3,363 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 26 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரம்மபுத்திரா நதி 5 இடங்களிலும், கோப்பிலி நதி 2 இடங்களிலும் என அசாமில் ஓடும் 8 பிரதான நதிகளும் அபாயகர கட்டத்துக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கினறன.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை முதல் 295 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →