இந்தியா

ஒடிசாவில் 21 ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு: ஒரே நாளில் 1,264 பேருக்குத் தொற்று

ANI

ஒடிசாவில் ஒரே நாளில் 1,264 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

ஒடிசாவில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றுக் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஒரே நாளில் 1,264 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒடிசாவில் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 21,099 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், 440 பேர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை 13,749 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட 7,025 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,720 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும் 1,129 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT