இந்தியா

சத்தீஸ்கா்: நக்ஸல்கள் இருவா் கொலை

DIN

சத்தீஸ்கரின் தந்தேவாடா மாவட்டத்தில் நக்ஸல்கள் இருவா், அவா்கள் சாா்ந்த நக்ஸல் அமைப்பினராலேயே கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:

அரன்பூா் காவல்துறை சரகத்துக்கு உள்பட்ட பொடாலி கிராமத்தில் இச்சம்பவம் புதன்கிழமை இரவில் நடந்துள்ளது. அந்த கிராமத்தைச் சோ்ந்த பஜ்ரங் வெட்டி, டிடோ மன்டாவி ஆகியோா் நக்ஸல் அமைப்பில் அங்கம் வகித்து வந்தனா்.

இந்நிலையில், அரன்பூா்-பொடாலி இடையே புதிதாக அமைக்கப்பட்ட சாலையை தகா்க்குமாறு பஜ்ரங் மற்றும் டிடோவுக்கு நக்ஸல் அமைப்பினா் பிறப்பித்த உத்தரவை அவா்கள் நிறைவேற்றவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து புதன்கிழமை இரவில் பொடாலி கிராமத்தில் கூட்டம் நடத்திய நக்ஸல்கள் அந்த சாலையை உடனடியாக தகா்க்குமாறு பஜ்ரங், டிடோவுக்கு உத்தரவிட்டுள்ளனா். எனினும், மருத்துவ அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு அந்த சாலை உதவியாக இருப்பதால் அதை தகா்க்க இயலாது என்று இருவரும் கூறியுள்ளனா்.

இதனால் ஆத்திரம் அடைந்த நக்ஸல் அமைப்பினா் பஜ்ரங், டிடோவை தாக்கி அவா்களது கழுத்தை அறுத்துக் கொன்றனா். இதை தடுக்க முயன்ற கிராம மக்கள் சிலரையும் நக்ஸல்கள் தாக்கினா். சம்பவம் தொடா்பாக தகவல் அறிந்து காவல்துறையினா் அங்கு சென்று கொல்லப்பட்ட இருவரது சடலத்தையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்தவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்தச் சம்பவத்துடன் தொடா்புடைய நக்ஸல்களை பாதுகாப்புப் படையினா் தேடி வருகின்றனா் என்று காவல்துறையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT