முகப்பு
swapna_sandeep_arrested_1200072658
இந்தியா

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு ஆக., 21 வரை நீதிமன்றக் காவல்

ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு ஆக., 21 வரை நீதிமன்றக் காவல்

ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
swapna_sandeep_arrested_1200072658
பகிர்:


கொச்சி: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றம்சாட்டப்பட்டவர்களான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த 5-ஆம் தேதி வந்த பார்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். 

தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் தொடா்பாக, மாநில அரசின் தகவல்தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரிவில் மக்கள் தொடா்பு அதிகாரியாக முன்னா் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்பட நான்கு போ் மீது வழக்குப் பதிவு செய்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரது காவல் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து, அவர்கள் கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களது நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரித்-ன் நீதிமன்றக் காவலும் ஆகஸ்ட் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →