முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் காங்கிரஸுடன் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்கள்: பாஜக மனு தள்ளுபடி

​அனைத்து 6 பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்களும் காங்கிரஸுடன் இணைந்ததை எதிர்த்து அளிக்கப்பட்ட புகார் மீது பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்காதது பற்றி பாஜக எம்எல்ஏ-வால் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் (கோப்புப்படம்)
பகிர்:


அனைத்து பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்களும் காங்கிரஸுடன் இணைந்ததை எதிர்த்து அளிக்கப்பட்ட புகார் மீது பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்காதது பற்றி பாஜக எம்எல்ஏ-வால் தொடரப்பட்ட வழக்கை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராஜஸ்தானில் உள்ள 6 பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்களும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்ததை எதிர்த்து, பாஜக எம்எல்ஏ மதன் கடந்த மார்ச் மாதம் பேரவைத் தலைவரிடம் புகார் அளித்தார். அதில், 6 பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தனது புகாரின்மீது பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்காததை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தார் மதன். இந்த மனு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, பாஜக எம்எல்ஏ அளித்த புகார் மீது பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுத்ததையறிந்த உயர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏ ராமநாராயணன் மீனா இன்று தெரிவிக்கையில், "பேரவைத் தலைவர் அங்கீகாரம் வழங்கியுள்ளதால், அனைத்து பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்களும் தற்போது கெலாட் அரசின் அங்கமாகியுள்ளனர்." என்றார்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, கெலாட் அரசுக்கு இது வலு சேர்த்துள்ளது

முழு கட்டுரையைப் படிக்க →